பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென் பிறந்து பார் என இறைவன் பணித்தான் இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான் வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான் அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன் ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான் --கண்ணதாசன்